தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வரின் ஆலோசனை தொடங்கியது!
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 23ம் தேதி நிறைவடையவுள்ளது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தாக்கத்தை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நிறைவடையவுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது.
இனி இரவிலும் ஆக்ரா காதல் சின்னத்தை காணலாம் – விவரங்கள் உள்ளே!
அதை அடிப்படையாக கொண்டு தளர்வுகள் வழங்குவதா என்பது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்த இறுதி முடிவு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அமலில் இருக்கும் நிலையில் தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. ஆலோசனை கூட்ட முடிவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3ம் அலை பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.