இனி இரவிலும் ஆக்ரா காதல் சின்னத்தை காணலாம் – விவரங்கள் உள்ளே!
தலைநகர் ஆக்ராவில் உள்ள காதல் நினைவுச்சின்னமான தாஜ்மஹால் இன்றிலிருந்து இரவு நேரங்களிலும் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மஹால்:
நம் நாட்டின் தலைநகரான டெல்லி ஆக்ராவில் உள்ள காதல் நினைவுச் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குவது தாஜ்மஹால் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த அதிசயத்தை பார்க்க உள்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட வருவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தாஜ்மஹால் இருக்கிறது என்பதே உண்மை.
கோயில் சிறப்பு காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட தாஜ்மஹால் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மார்ச் 17, 2020 அன்று முதல் இரவு நேர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாகவே இரவு நேர பார்வைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது நாட்டில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் சுற்றுலா தலங்களை திறக்க அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து இருந்தது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த அறிவிப்பின் படி ஆகஸ்ட் 21-ஆம் தேதியான இன்றிலிருந்து இரவு நேர பார்வையாளர்களாக 50 நபர்கள் மட்டுமே அரசு உத்தரவின் படி ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அனுமதிச் சீட்டை ஆக்ராவில் உள்ள 22-மால் சாலை இஎஸ்ஐ அலுவலகத்தின் கவுண்டரில் இருந்து ஒரு நாள் முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்வையாளர்களுக்கான நேரமும் இரவு 8:30 – 9 மற்றும் 9 – 9:30 மற்றும் 9:30 – 10 மணி என மூன்று கால நேர அட்டவணைகள் தரப்பட்டுள்ளது.