ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி? – பிசிசிஐ தீவிர பேச்சுவார்த்தை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலினால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள்:
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகளில் 29 முடிவடைந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது. மீதம் உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
தமிழகத்தில் மெல்ல குறையும் கொரோனா தொற்று பாதிப்பு – இன்று 1,797 பேருக்கு உறுதி!
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள, பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி தான் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மூலமாக தொற்று பரவல் அபாயம் குறைந்துள்ளதால் இந்த முறை ரசிகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் முழுக்க முழுக்க இது ஐக்கிய அரபு அமீரக அரசின் முடிவாக மட்டுமே இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு கூடியுள்ளது.