இந்தியாவில் ஒரே நாளில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று – 1,329 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரே நாளில் 1,329 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் மெல்ல கொரோனா 2ம் அலையின் வேகம் குறைந்து பாதிப்புகள் குறையத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, கொரோனா பாதிப்புகளை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை!
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 51,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் இதுவரை நாட்டில் 30,134,445 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. 3,93,338 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் 6,19,739 பேர் கொரோனா சிகிச்சை எடுத்து வருகின்றனர். நேற்று மட்டும் 64,527 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு தளர்வுகள் நிறுத்தம் – மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
நாட்டின் இறப்பு விகிதம் நேற்றை பொறுத்த வரையில், 1.33% ஆக உள்ளது. மேலும், இதுவரை 39,95,68,448 பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 17,35,781 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
மக்கள் முட்டாளா இருக்கிற வரை இந்த கொரோனா நாடகம் தொடரும்…
இந்தனை ஆண்டு இந்த இந்திய அரசு எப்படி ஏமாட்டிறியதோ அதைத்தான் நோய் இன்னும் பேரில் நாடகமாடி மக்களை கொள்ளுகிறது…
எவனாவது மூச்சுவிட முடிலனு hospitala வந்து படுத்தனா இவனுங்க டிவி சொல்லுறதுக்கு முன்னாடி…
எல்லாம் தரகர்கள் வெளிநாட்டுக்காரனுக்கு சோம்படிக்கிறதுல 100% விசுவாசிகள் இந்த தலைவர்கள்… ஆட்சிமட்டும்தான் மாறும் காட்சி மாறாது….
இந்த நாட்டில் இல்லாத மருத்துவமா வேற ஒருத்தன்கிட்ட இருக்கு?