முழு ஊரடங்கு தளர்வுகள் நிறுத்தம் – மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக திடீரென்று கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதை அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிகம் பாதித்தது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. தீவிர கட்டுப்பாடுகளினால் கடந்த இரண்டு வாரங்களாக மெல்ல தொற்றின் பாதிப்புகள் குறைந்து வந்தது. இதனால் மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து வந்தது.
ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றின் 2ம் அலையின் தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பி விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் அதிகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 10,000 க்கும் குறைவாக இருந்த பதிவுகள், தற்போது சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – 2 நாட்கள் நீட்டிப்பு!
இதனால் தினசரி பாதிப்பு மீண்டும் 10,000 க்கும் அதிகமாக பதிவாகிறது. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் அறிவிக்க இருந்த கூடுதல் தளர்வுகளை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. தடுப்பூசி கையிருப்பு, ஆக்ஸிஜன் படுக்கை வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க முடியும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், அங்கு டெல்டா பிளஸ் என்னும் வீரியம் மிகுந்த கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.