செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை!
2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வகுப்புகள்:
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் அனைத்தும் ஆகிய இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் கட்டுப்பாடுகளில் இயங்கி வருகிறது. நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏஐசிடிஇ புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை திருத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கல்லூரிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து ஏஐசிடிஇ தெரிவித்தாவது, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூர கல்வி மற்றும் இணையவழி படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் அங்கீகாரம் பெற வேண்டும். அதேபோல் பல்கலை, கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை ஜூலை 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும். 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதி முடிவு பெறும்.
முழு ஊரடங்கு தளர்வுகள் நிறுத்தம் – மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும், முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு கட்டணத்தையும் திரும்பி தரும் வகையில் தொழில்நுட்ப படிப்புகளின் இடங்களை திரும்ப பெற செப்டம்பர் மாதம் 10ம் தேதி கடைசி தேதி ஆகும். முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
முழு கட்டணத்தையும் திரும்பி தரும் வகையில் முதுநிலை மேலாண்மை படிப்புகளின் இடங்களை திரும்ப பெற ஆகஸ்ட் 6ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் குறையும் வரை மாணவர்களை முழு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், மாணவர்களிடம் 4 தவணையாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கால கட்டத்தில் பேராசிரியர்களை பணிகளில் இருந்து கல்வி நிறுவனங்கள் நீக்கக்கூடாது என்றும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.