வைகை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை – பயணிகள் மகிழ்ச்சி.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தினந்தோறும் ஏராளமான மக்கள் பயணித்து வருகின்றனர். எப்போதும் இந்த ரயில் கூட்ட நெரிசலாக காணப்படுவது வழக்கம். தற்போது இந்த ரயிலானது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் இயங்கியுள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ்:
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இயங்கும் நேரத்தை கொண்டுள்ளது. இந்த ரயிலில் காலை நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அதிகாலை இயக்கப்படுவதால் மதுரையில் இருந்து கொடைரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் மக்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலையே தேர்வு செய்கின்றனர். மேலும் இந்த ரயிலானது விரைவு ரயில் என்பதால் நீங்கள் உரிய நேரத்திற்கு செல்லும் இடத்தை அடையலாம்.
Follow our Instagram for more Latest Updates
முதலில் மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு கடந்த 1977ம் ஆண்டு சென்னைக்கு பகல் நேர ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்று இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வைகை எக்ஸ்பிரஸ் மதுரை டூ சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 6 மணி 34 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் 5G சேவை.. இந்தியாவில் இன்னும் இத்தனை நகரங்களில் அமல்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் மதுரையில் இருந்து இயக்கப்படும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வேகத்தை 110 கீ.மீ இருந்து 130 கீ.மீ ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் நாட்களில் மதுரையில் இருந்து சென்னைக்கு இன்னும் வேகமாக பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்