மத்திய அரசு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – செப் 21 முதல் பயிற்சி வகுப்புகள்!
தமிழகத்தில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ‘கம்பைண்டு கிராஜுவட் லெவல்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற செப். 21 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ‘கம்பைண்டு கிராஜுவட் லெவல்’ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அதனால் சென்னையில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் இலவச பயிற்சி நடைபெற இருக்கிறது.
இந்த இலவச பயிற்சியானது வருகிற செப். 21 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் General Intelligence and Reasoning, General Awareness, Numerical Aptitude, English Comprehension போன்றவை பாடத்திட்டங்களாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பாடத்திட்டங்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் செப்.17 மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு! பகுதிகள் குறித்த விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் வாரந்தோறும் இந்த பாடத்திட்டங்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட இருக்கிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 9597557913 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப்பில் தங்களது பெயர், கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இந்த தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் முறையாக விண்ணப்பித்து இந்த இலவச பயிற்சி முகாமில் சேர்ந்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்