தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல் துறை உத்தரவு!
தமிழக ரேஷன் கடைகளில் தற்போது கொரோனா இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் காலாவதியான மளிகை பொருட்களை விநியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
மளிகை பொருட்கள்:
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு காலாவதியான பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Airtel பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பலருக்கு காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் புதிய டீ தூள் பாக்கெட்டை மாற்றி ஏற்கனவே கடையில் இருந்த காலாவதியான டீ தூள் பாக்கெட்டை விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் 14 வகை மளிகை பொருட்கள் இருப்பை பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் – இன்னும் 5 நாட்கள் மட்டுமே!
இந்நிலையில் தற்போது இது குறித்து உணவு வழங்கல் துறை மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தெரிவித்ததாவது, காலாவதியான மளிகை பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை உடனே ஊழியர்கள் நீக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்றால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.