அண்ணாமலை பல்கலை காலிப்பணியிடம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதாகவும், அப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துணைவேந்தர் பதவி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழகத்தில் 1929 ம் ஆண்டு சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட பல்கலை ஆகும். 1929ம் ஆண்டு சட்டத்தின்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு அரசு பல்கலைக்கழகம் என்றாலும் அதில் இடம்பெற்ற ஒரு சில பிரிவுகள் இப்பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் செயல்படும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியலை வேந்தர் (ஆளுநர்) அவர்களிடம் இணைவேந்தர் அளிப்பார்.
TN Job “FB Group” Join Now
முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை வேந்தர், துணைவேந்தராக தேர்வு செய்து நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட துணை வேந்தர் பல்கலைக்கழக அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான நிர்வாகியாக இருப்பார். பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகம், ஆசிரியர், ஊழியர் பணியமர்த்தல், கல்வி மற்றும் வகுப்புகள், அன்றாட நிர்வாகம் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். துணைவேந்தர் பதவிக்கு காலியிடம் உள்ளதாக தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் – இன்னும் 5 நாட்கள் மட்டுமே!
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பல்கலையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் அல்லது துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேடல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கு நேரடியாகவும் விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.