தமிழகத்தில் திருமண நிகழ்வுகளுக்கு இ-பதிவு மேற்கொள்வோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கான இ-பதிவில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இ-பதிவு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை 3 வகையாக தமிழக அரசு பிரித்துள்ளது. அதன்படி வகை 1ல் இடம்பெற்றிருக்கும் 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
வகை 2 மற்றும் 3ல் இடம்பெற்றிருக்கும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 3வது வகையில் இடம் பெற்றிருக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வாடகை டாக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இ-பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வகை 2ல் இடம்பெற்றிருக்கும் 23 மாவட்டங்களுக்கு இ-பாஸ் தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களில் திருமண நிகழ்வுகளுக்காக வேறு மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனை திருமணம் நிகழ்வு நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி திருமண நிகழ்வுக்கான இ-பதிவில் ஏதேனும் தவறு செய்தால் சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு மட்டும் எடுக்க வேண்டும் என்றும் தவறான தகவல் தந்தாலோ அல்லது அதிகம் பேர் இ-பதிவு செய்திருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
working handling