தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!

0
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - இன்று முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் சில தளர்வுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 28ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மே 10 முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பல்வேறு தளர்வுகளுடன் தற்போது ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ ஆகியவை 3வது வகையில் உள்ளது.

ஜூன் 21 முதல் வார இறுதி, இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ ஆகியவை வகை 2 இல் உள்ளன. இதர 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!

பிற மாவட்டங்களில் இன்று முதல் கடைகள் இரவு 7 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும், ஆட்டோ மற்றும் டாக்சிகள் இ-பதிவுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வகை 3 இல் உள்ள மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட துவங்கும்.

தமிழக மின் நுகர்வோர் சேவை மைய எண்கள் அறிவிப்பு – முதல்வர் திறந்து வைப்பு!

மேலும் மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்தும் இன்று முதல் துவங்கி உள்ளது. பயணிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!