மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி – அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படுகிறது. அகவிலைப்படியானது ஊழியர்களின் செலவுகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களும் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது அகவிலைப்படியை கணக்கிடும் முறையை மாற்றியுள்ளது.
அகவிலைப்படி:
அரசு ஊழியர்களுக்கு பொதுவாக அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. அகவிலைப்படி என்பது ஊழியர்களின் அன்றாட அத்திவாசிய செலவினங்களை எதிர்கொள்ள வழங்கப்படும் தொகையாகும். அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்னும் இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் இது தொடர்பான அறிவிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அதிகரித்து வருகிறது. அதனால் பணவீக்கம் குறைந்து சீரான நிலைக்கு திரும்பும் போது அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு அந்த விகிதத்தை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கி ஊழியர்களின் அகவிலைப்படியின் அளவு கணக்கிடப்படும். தற்போது அகவிலைப்படி கணக்கிடும் முறையை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது ஒரு புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் 1963-65 அடிப்படை ஆண்டில் பழைய தொடருக்கு 2016=100 உடன் WRI-ன் என்ற புதிய வரிசையை தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு 1963-65 என்பதில் இருந்து 2016 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் ஆலோசனைகளின்படி நோக்கத்தை விரிவுபடுத்தவும் மற்றும் குறியீட்டை மேலும் திறமையாக மாற்றவும் ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.