அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிரமாணப் பத்திரம் தாக்கல்!
அகில இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என கூறி பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
கல்லூரிக்கு புதிதாக வரும் முதலாமாண்டு மாணவர்களை ஏற்கனவே அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சீனியர் மற்றும் ஜூனியர் என்ற மனநிலையுடன் ராகிங் செய்கின்றனர். இதனால் பிற மாணவ, மாணவிகளை மனதளவிலும் உடல் அளவிலும் காயப்படுத்தி விடுகிறார்கள். சில நேரங்களில் இந்த ராகிங் செயல் சில மாணவர்களின் உயிரையே பறிக்கும் நிலைக்கும், பழிவாங்கும் எண்ணத்திற்கும் கொண்டு செல்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிகம் ராகிங் என பெயரில் கொடுமைகள் நடக்கின்றனர். இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க ராகிங் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி நிர்வாகம் ராகிங் செய்வதை தடை செய்துள்ளது. சக மாணவர்களை சீனியர், ஜூனியர் என்று வேறுபடுத்தாமல் தோழமை மற்றும் சகோதர உணர்வுடன் பழக வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் இன்னும் சில கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் பல கொடுமைகள் மாணவர்களுக்கு நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சுற்றறிக்கை ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளது.
இதில் www.antiragging.in அல்லது www.amanmovement.org என்ற இணையதளத்தில் இருந்து பிரமாணப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்து அதில் மாணவர்கள், பெற்றோர் / பாதுகாவலர் ஆன்லைன் மூலமாக ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று கூறி பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதுமுள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்