தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு குறித்த முக்கிய தகவல் – CEO அதிரடி அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு குறித்த முக்கிய தகவல் - CEO அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு குறித்த முக்கிய தகவல் - CEO அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான விடுப்பு குறித்த முக்கிய தகவல் – CEO அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறை கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு இடங்களில் இதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஈட்டிய விடுப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்துடன் நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டும் இதற்கு தடை நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த வருடமும் ஈட்டிய விடுப்பிற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போராட்ட உணர்வை தூண்டுகிறது. இந்த ஈட்டிய விடுப்பு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் விடுப்பை எடுக்கவில்லையெனில் இதனை பணமாக மாற்றி கொள்ளலாம். அதாவது விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அதனால் இதனை நடப்பு ஆண்டில் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) 9(a) –ன் படி கணக்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் விரைவில் ஈட்டிய விடுப்பிற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!