முக்கியமான நிகழ்வுகள் மே-11
தேசிய தொழில் நுட்ப தினம்
- இந்தியா மே 11, 1998இல் புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்நாளை நினைவு கூற ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில் நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி இந்தியா மூன்று அணுகுண்டு சோதனையும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக நடத்தியது.
- இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.
- இதனை அங்கீகரிக்கும் விதமாக மே11 தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்
பிறப்பு:
- மே 11, 1897ல் பிறந்தார்.
ஊர்:சிவகங்கை-தமிழ்நாடு.
சிறப்பு:
- கவியோகி, மகரிஷி என்று போற்றப்படுபவர்.
- இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
- திருக்குறளை அதே ஈரடிகளில் அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார்.
- 1968ம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
விருதுகள்:
- 1984-தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி.
- சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
நூல்கள்:
- பேரின்பம்
- கவிக் கனவுகள்
- அருட்செல்வம்
- தமிழ்க் கனல்
- பாரத கீதம்
- அன்னை
- இவளும் அவளும்
- சிவானந்த ஜோதி
- இதுதான் உலகம்
- கல்விக்கதிர்
இறப்பு:
- மார்ச் 7, 1990 ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்