முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 17
உலக ஹீமோபிலியா தினம்
- உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
- மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது.
- ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய்.
- 1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
- உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
- உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
- கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை கடந்த 1963இல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார்.
- கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17 ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் நினைவு நாள்
பிறப்பு:
- 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார்.
சிறப்பு:
- சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
விருது:
- 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எழுதிய நூல்கள்:
- முதன்மை உபநிடதங்கள்
- இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
- இந்தியத் தத்துவம் தொகுதி I & II
- கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
- பகவத் கீதை விளக்க உரை
- கிழக்கும் மேற்கும்
- மகாத்மா காந்தி
- இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
- இந்திய சமயங்களின் சிந்தனை
- சமயமும் கலாச்சாரமும்
- சமகால இந்திய தத்துவம்
- சமயமும் சமுதாயமும்
- உண்மையான கல்வி
இறப்பு:
- 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மறைந்தார்.
தீரன் சின்னமலை பிறந்த தினம்
பிறப்பு:
- 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தார்.
சிறப்பு:
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- இந்திய விடுதலைக்காக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்டவர் .
- கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
- இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
- தமிழக அரசால் நினைவு மண்டபம் கட்டபட்டது -டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது.
இறப்பு:
- ஆங்கிலேய அரசு 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தூக்கிலிட்டனர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்