TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் விளக்கம்!

0
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணைய தலைவர் விளக்கம்!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணைய தலைவர் விளக்கம்!

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் விளக்கம்!

தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருப்பது குரூப் தேர்வுகளுக்காக தான். அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தற்போது குரூப் 4 தேர்வுகள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

குரூப் 4 தேர்வுகள்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அரசு பணியாளர் தேர்வுகளும் நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகள் நடக்கவிருந்த குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடைபெறவில்லை. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்த காரணத்தால், இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

குரூப் 2 மற்றும் குரூப் 4 விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறி இருந்தார். முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது போலவே, கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்றும் தேர்விற்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது..

இது குறித்த முக்கிய தகவல் ஒன்றினை டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது மத்தியில் குரூப் 4 தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், இந்த தேர்விற்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவதை தடுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இது போன்ற தகவல்கள் மட்டுமின்றி, குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல தேர்வின் போது தனிநபரின் தகவல்கள் தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்பட்டு விடும். இது முறைகேடுகளை தடுக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறி உள்ளார். விடைத்தாள்களை எடுத்து செல்லும் வாகனங்களில் முன் பின் என்று இரண்டு பக்கமும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்று கூடுதல் தகவல்களையும் வழங்கி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!