தமிழகத்தில் நாளை (மார்ச் 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 7) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில்திமுக தலைமையிலான அரசு மின்சாரத்துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. புதிய திட்டங்களையும், மாற்றங்களையும் புகுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்கள் மூலம் துணை மின் நிலையத்தில் பணிகள் நடைபெறுகிறது. இந்த மின் பராமரிப்பு நேரங்களில் மின்கம்பங்களை சரி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின் தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பணிகளின் போது விநியோகம் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். மேலும் செய்திதாள், சமூக வலைதள பகுதிகளில் மின்தடை குறித்து பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்தடை குறித்து மின் பயனர்கள் அறிந்து முன்கூட்டியே அதற்கேற்றவாறு பணிகளை திட்டமிடுகின்றனர்.
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் அரசூா், அன்னூர் சாலை, மோளபாளையம் பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், , செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், செங்கோடகவுண்டன், சமத்துவபுரம், அன்பு நகர், பொன்னாண்டம் பாளையம், புதூர் ஆகிய பகுதிகளில் காலை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.