தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை தலைமை ஆசிரியர்கள் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தொடக்க பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன . ஆனால் அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டன.
அதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வந்து சென்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தினால் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாத காரணத்தினாலும்,
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து இல்லை – மாநில முதல்வர் விளக்கம்!
உயர், மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த பணிகள் நடைபெற உள்ளதாலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் மற்றும் கற்பிக்க தேவையான பல நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளிகள் துணை, குடிநீர் தொட்டிகள் தூய்மை, மின்சார சாதனங்கள் சரிபார்த்தல், மேலும் வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாலும்,
TN Job “FB Group” Join Now
அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் (தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை) பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற ஜுன் 14 முதல் பள்ளிக்கு வருகை புரிந்து மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Private job
want special reservation for covid affected students in mbbs seats