10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து இல்லை – மாநில முதல்வர் விளக்கம்!
அசாம் மாநிலத்தில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதிப்புகள் விகிதம் 2% க்கு கீழ் குறைவாக இருந்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. ஆனால் அசாம் மாநில அரசு பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி மாநில கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேர்வுகளை நடத்த முடிவு செய்திருப்பதாக அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு கூறியுள்ளார்.
ஜிப்மரில் இனி நுழைவுத்தேர்வு இல்லை – நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படியில் சேர்க்கை!
ஜூலை 1ம் தேதிக்குள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 2% க்கும் கீழ் குறைவாக இருக்கும் பட்சத்தில் 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். இல்லையெனில், ஆசிரியர்கள் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டை மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்று மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தின் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் ஆகிய இரண்டு கல்வி வாரியங்களும் ஜூலை மாதத்தில் தேர்வு நடத்த இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தேர்வுகள் மூன்று பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என்றும், பல தேர்வு வினாக்கள் மட்டுமே குறைந்த மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக ஆண் மற்றும் பெண் மாணவர்கள் தனித்தனி தேதிகளில் தேர்வுகளை எழுதுவார்கள் என்று முதல்வர் கூறினார். மேலும் ஜூலை 15 முதல் 20ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.