ஜனவரி 21 முதல் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு..! மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா 3ம் அலைக்கு மத்தியில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தற்போது விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து கேரள மாநில அரசு சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 21ம் தேதி முதல் 1 லிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பேரலையின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து அரசு பின்பு ஆலோசனை மேற்கொள்ளும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேரடி முறையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கேரளாவை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் KITE மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வகுப்புகளுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடருகிறார்களா என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
குறிப்பாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் விதம் மற்றும் கற்றல் திறன் குறித்தும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளில் ஏதேனும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்போது பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பள்ளிகளில் உள்ள அலுவலகங்கள் வழக்கமான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.