தமிழகத்தில் சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு – ரூ. 5,09,500 அபராதம் .. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!

0
தமிழகத்தில் சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு - ரூ. 5,09,500 அபராதம் .. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு - ரூ. 5,09,500 அபராதம் .. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு – ரூ. 5,09,500 அபராதம் .. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியில் சிலர் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் வடிகால்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கழிவுநீர்:

சென்னையில் மழை காலங்களின் போது நீர் சாலைகளில் தேங்கி நிற்பது வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீர் செல்ல வழி இல்லாமல் நீர் தேக்கமுறுவதால் சுகாதார சீர்கேடு காரணமாக தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உருவாகிறது.

தமிழக பள்ளிகளில் 4188 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!

Follow our Instagram for more Latest Updates

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் மழை நீர் இடை நிற்காமல் செல்ல ஏதுவாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். இது தொடர்பான கள ஆய்வில் சட்டவிரோதமாக 1, 470 கழிவு நீர் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மழை நீர் செல்லும் பாதை தடைபட்டு தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் பெற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 5,09,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் மழைநீர் வடிகால் வாயிலாக கழிவு நீர் வெளியேற்ற கூடாது என்றும் மீறினால் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!