மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை:
தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடைநிற்றல் இன்றி கல்வி பயில கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!
பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TCS, Wipro, Infosys & HCL நிறுவனங்களில் 1,50,000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!
உதவித்தொகையாக அதிகபட்சமாக ஆண்டுக்கு 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் முகவரி: [email protected] என்ற முகவரியிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2021க்குள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலக இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.