கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.25,000/-
கோயம்புத்தூரில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional- I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 26.04.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உள்ளூரில் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஐ.சி.ஏ.ஆர் – கரும்பு வளர்ப்பு நிறுவனம் |
பணியின் பெயர் | Young Professional- I |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
ICAR SBI காலிப்பணியிடங்கள்:
Young Professional- I பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
YP 1 வேலைகளுக்கான கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எஸ்சி. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICAR SBI தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஐ.சி.ஏ.ஆர் மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
Young Professional- I பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Good morning
More details share me mam..
Good
Super
I am Vivasayee so i am interst