ரூ.15,00/- சம்பளத்தில் 8 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CPCRI) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Field Assistant பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று (27.05.2022) இப்பணிக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ICAR-CPCRI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-CPCRI) Field Assistant பணிக்கு என 01 காலி இடம் உள்ளது.
- Field Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தென்னை மரம் ஏறுவதில் 01 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 எனவும், பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
- Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இன்று (27.05.2022) நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ICAR-CPCRI விண்ணப்பிக்கும் முறை:
இந்த ICAR-CPCRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து தேர்விற்கு வரும் போது கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.