மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? HRA, DA உயர்வு எதிரொலி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வினால் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் DA உயர்வு அளிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பள உயர்வு:
மத்திய அரசு கடந்த மூன்று தவணைகளாக தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகளை பொருளாதார சிக்கலினால் வைத்தது. மேலும் அனைவரின் கோரிக்கையின் படி, கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் DR உயர்வு வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் 17% ஆக இருந்த DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் மாத ஊதியம் அதிகமாக கிடைத்தது. DA உடன் தொடர்புடைய வீட்டு வாடகைப்படியும் தற்போது செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு 2021 இருவருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 2017ம் ஆண்டு மத்திய செலவினத்துறை, DA உயர்வு 25% ஐ தாண்டும் போது வீட்டு வாடகைப்படி (HRA) உயர்த்தப்படும் என்று அறிவித்தது. தற்போது DA 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த மாதத்திற்குள் HRA அதிகரித்து வழங்கப்படும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. வீட்டு வாடகை படி நகரங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள படி அதிகரிக்கப்படும். X, Y மற்றும் Z என்று வகைப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% ஆகும். 50 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் X வகை என்றும், 5 லட்சத்திற்கு அதிகம் உள்ள நகரம் Y வகை என்றும் மக்கள் Z வகை நகரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
இதனால் அடிப்படை ஊதியத்துடன் மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ. 5400, 3600 மற்றும் ரூ ரூ.1800 கிடைக்கும். இதனால் ஊழியர்களின் மாத வருமானம் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிகிறது. மேலும், இந்த அக்டோபரில் வரவிருக்கும் டிஏ மற்றும் டிஆர்என்எஸ் நிவாரணம் மேலும், 3% அதிகரிக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. அப்படி மேலும், 3% DA அதிகரிக்கப்படும் போது ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படி உயர்வினை 31% ஆக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.