அமைதிக்கான நோபல் பரிசு 2021 இருவருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் நோபல் பரிசு பெறுவோரின் வரிசையில் இன்று (அக்டோபர் 8) அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
நோபல் பரிசு
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
அதன் படி இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வைத்து அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அக்.9ம் தேதி பொது விடுமுறை – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
அந்த வரிசையில் இப்போது அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதாக நார்வேஜியன் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.