கொரோனா 2ம் அலை எதிரொலி – ஹோட்டல் துறை கடுமையான பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 270-க்கும் மேற்பட்ட பிரபலமான ஹோட்டல்கள் மற்றும் அறைகள் மூடப்பட்டுள்ளது. இதில் 20,000 அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
ஓட்டல் அறைகள் மூடல்:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. பலர் வேலை இழந்து தவிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் பொது இடங்களில் மிகவும் குறைந்தது. அனைத்து தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்தது. பல நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டது. குறிப்பாக சுற்றுலா தலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரபலமான ஹோட்டல்கள் இந்த கொரோனா இரண்டாம் அலையால் மூடப்பட்டுள்ளது. முன்பதிவு விகிதம் 20% அளவிற்கு குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 21க்கு பின் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை? வெளியான தகவல்!
பெரும்பாலும் மக்கள் சுற்றுலா மற்றும் பிற வேலைகளுக்கு வேறு செல்லும் போது ஹோட்டல்களில் தங்குவது வழக்கம். பிரம்மாண்ட ஹோட்டல்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் ஏராளமானோர் ஹோட்டல் அறைகளில் தங்குவர், உணவு உண்பர். பெரிய ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் தற்போது ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி பெரும்பாலும் மூடியே கிடக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் ஹோட்டல்கள் அறைகளின் முன்பதிவு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இந்த வருவாய் இழப்பினால் ஓட்டல்கள் மூடும் நிலைக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 270-க்கும் மேற்பட்ட பிரபலமான ஹோட்டல்கள் மற்றும் அறைகள் மூடப்பட்டுள்ளது. இதில் 20,000 அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது தவிர ஹோட்டல் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளன.