தமிழகத்தில் மீன்களின் விலை உயர்வு? தடைக்காலம் நேற்றுடன் நிறைவு!
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த மீன் பிடி தடைக்கலாம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டீசல் விலை உயர்வு காரணமாக மீன்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
மீன்களின் விலை உயர்வு:
தமிழகத்தில் பொதுவாக கோடை காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 45 முதல் 60 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை உத்தரவு விதிக்கப்படும். இந்த தடை நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது. அந்த சமயத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் துணிக்கடை, நகைக்கடைகள் திறப்பு?? முதல்வரிடம் கோரிக்கை!!
இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் சென்னை காசிமேடு, தூத்துக்குடி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்காக 240 விசைப்படகு மீனவர்கள் பதிவு செய்த நிலையில், 120 படகுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுகளில் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்த டீசல் விலை உயர்வு மீன்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக அதிக மீனவர்கள் கடலுக்கு செல்ல தயங்குகின்றனர். குறைவான அளவில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு செல்வதால் மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.