தமிழகத்தில் நவ.1ம் தேதி முதல் பள்ளி விடுதிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளிகளுடன் செயல்பட்டு வரும் விடுதிகளை திறப்பது குறித்த வழிகாட்டுதல் செயல்முறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
விடுதிகள் திறப்பு
தமிழகத்தில் வரவிருக்கும் மாதம் முதல் 1லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான பள்ளிகள் முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களின் கீழ் செயல்பட இருக்கிறது. இந்நிலையில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான விடுதிகளையும் வரும் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!
அதற்காக விடுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி மற்றும் விடுதி வளாகங்களின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி விடாமல் இருக்கும் படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளில் மின் கசிவின் காரணமாக விபத்துகள் ஏதேனும் ஏற்படாத வண்ணம் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறும்!
அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பராமரித்தல், கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுகளையும் கொடுக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ, மாணவிகள் விடுதிக்குள் வருவதால் அவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.