மதுரையில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறும்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டது. அதன் காரணமாக பலர் தங்களது வேலையே இழந்ததால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் நிறுவனங்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக மேலெழுந்து வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் அரசாங்கம்!
இந்நிலையில் மாதந்தோறும் அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மதுரை சவுராஷ்டிரா சிறுதொழில், மேற்கு ரோட்டரி, மெட்ரோ ரோட்டரி சங்கங்களின் சார்பில் அக்டோபர் 24ம் தேதி மதுரை கல்லூரியில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எச்.சி.எல்., டி.சி.எஸ்., உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அதன் மூலம் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ கல்வித்தகுதி மற்றும் பணி முன் அனுபவம் உள்ளவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். இதற்கு தேவையான சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பயோடேட்டா உடன் நேரடியாக பதிவு செய்யலாம் என்று சிறு தொழில் சங்க தலைவர் வெங்கடேஷ், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார்.