வீடுகளுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு திட்டம் – மத்திய அரசு!
மத்திய அரசு வீடுகளுக்கான புதிய காப்பீடு திட்டம் ஒன்றை அறிவித்து, அதற்கான பலன்கள் மற்றும் பிரீமியம் தொகை பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது. வீட்டு காப்பீடு திட்டத்தை பற்றி இந்த பதிவில் காண்போம்.
வீடு காப்பீடு திட்டம்:
பொதுமக்களுக்கு ஆபத்து காலத்திலும், அவசர காலத்திலும் உதவுவதற்கு என்று பல காப்பீடு திட்டங்கள் உள்ளது. இவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதித்துறையின் கீழ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிலும் பல திட்டங்கள் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு, வாகன காப்பீடு மற்றும் தனி நபர் காப்பீடு போன்ற காப்பீடுகள் உள்ள நிலையில் மத்திய அரசு தற்போது வீட்டு காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப்டுத்தியுள்ளது.
Facebook (முகநூல்) பயனர்கள் ‘இதை’ செய்ய வேண்டாம் – சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
இயற்கை பேரிடர்களால் வீடுகளுக்கு ஏற்படும் ஆபத்தை கருதி கொண்டு இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ தகவலின்படி வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மக்கள் வீடுகளுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுசெய்ய மத்திய அரசு ரூ .3,00,000 காப்பீட்டுத் தொகையை வீட்டு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். மேலும், இயற்கை பேரிடர்களின்போது வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ .3,00,000 வரை காப்பீடு தொகை பெறலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தில் தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு கொள்கை எடுத்துள்ள குடும்ப உறுப்பினர்கள்2 பேருக்கு தலா 3 லட்சம் ரூஒபை வழக்ங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது காப்பீடு நிறுவனங்களின் மூலம் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளநிலையில், திட்டத்திற்கான ப்ரீமியம் தொகையை ரூ.1,000 க்கு மேல் நிர்ணயிக்க நிறுவனங்கள் விரும்புகிறது. ஆனால் இந்த பாலிசியின் பிரீமியத்தை ரூ .500 என்ற அளவில் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.