Facebook (முகநூல்) பயனர்கள் ‘இதை’ செய்ய வேண்டாம் – சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
தமிழகத்தில் சமூக வலைத்தளமான முகநூலில் தங்களது புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. புகைப்படத்தை பயன்படுத்தி பண மோசடிகள் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சைபர் கிரைம் எச்சரிக்கை:
தற்போதைய கால சூழலில் சமூக வலைத்தளங்கள் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிக நேரத்தை இந்த சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்கள் மிக பிரபலமாக உள்ளது. இந்த சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களுக்கென கணக்குகளை உருவாக்கி அந்த பக்கங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தங்களது புகைப்படங்களை பதிவிடுவது என்பது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM கார்டில் PIN உருவாக்கம்!
இவர்கள் பதிவிடும் இந்த புகைப்படங்களால் பல்வேறு விபரீதங்கள் நடைபெறுகிறது. மோசடி கும்பல்கள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, பெண்களை பயன்படுத்தி ஏராளமான குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது. இது குறித்து காவல்துறை நடவடிக்கைகள் எடுத்த போதிலும் குற்றங்கள் குறையவில்லை. ஒவ்வொரு முறையும் பல்வேறு மாற்றங்களுடன் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது முகநூலில் பதிவிடும் புகைப்படங்களை வைத்து மோசடி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த புகைப்படங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் வங்கியில் இருந்து பேசுவது போல் நடித்து உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்களை கைப்பற்றி பணம் பறிப்பு மோசடியில் ஈடுபடுகின்றனர். அதனால் முகநூலில் யாரும் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறை மக்களை எச்சரித்துள்ளது.