தமிழகத்தில் நாளை (மார்ச் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 18) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தெரிவித்து உள்ளது.
உள்ளுர் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் பலத்த ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. மேலும் அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கபட்டது. மேலும் பொது தேர்வுகளான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பங்குனி உத்திர திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் காலிப்பணியிடங்கள் – முழு விபரங்கள் இதோ!
இந்த திருநாளின் போது தான் பரமேஸ்வரன் பார்வதியையும், ராமன் சீதையையும், முருகன் தெய்வானையையும் ஆகிய தமிழ் மக்களின் முக்கிய தெய்வங்களுக்கு திருமணம் முடிந்ததாகவும் வரலாறு கூறி உள்ளது. இது தவிர தமிழ் கடவுளான முருகனுக்கு அவரது அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் தேர் திருவிழா ஆண்டுதோறும் அமோகமாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தி முருகனின் கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்வார்கள்.
மதுரை மாவட்டத்தில் மார்ச் 19 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இவ்வாறு திருவிழா நடைபெற இருப்பதால் நாளை (மார்ச் 18) தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் உள்ளுர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது தென்காசி மாவட்டமும் சேர்ந்து உள்ளது. அங்கும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதால் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாளை பொது தேர்வு மற்றும் ஏதேனும் முக்கிய தேர்வுகள் நடைபெற இருப்பதால் இந்த தேர்வுகள் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.