தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர்களுக்கு இல்லை!
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜன 10 ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். மேலும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளது. நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் கட்டாயம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. டிசம்பர் 24ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 2021 டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஜன.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஜனவரி 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது சுழற்சி முறையில் நடைபெறும் வகுப்புகள் 3ம் தேதி முதல் முழுமையாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. இதுவரை 30 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பிறகு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் ஓமிக்ரான், திடீரென ஊரடங்கை ரத்து செய்த அரசு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளும் தொடர்கிறது. மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தொற்று அதிகரிக்கும் காரணத்தால் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை புரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.