தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – அனுமதி அளிக்குமா அரசு?

0
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை - அனுமதி அளிக்குமா அரசு?
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை - அனுமதி அளிக்குமா அரசு?
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – அனுமதி அளிக்குமா அரசு?

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் திருவிழாவிற்கு, மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது நேற்று நடைபெற்ற திருப்பூர் மண்டல பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கோரிக்கை வைத்து உள்ளனர்.

உள்ளுர் விடுமுறை:

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மார்ச் 16ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, மாலை மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல், இரவு வெள்ளை யானையில் அம்மன் புறப்படுதல், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் ஆகிய விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மேலும் அதன் தொடர்ச்சியாக நாளை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் கோவிலுக்கு நாளை, ஆயிரக்கணக்கான பக்தகோடிகள் சுவாமி தரிசனம் செய்ய வருவார். இதனால், கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கையாக தீயணைப்பு துறை வாகனமும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருப்பூர் மாவட்ட மண்டல பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், செந்தில்குமார், சேவுகன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் கலந்து கொண்டவர்கள் அங்கு ஒரு கோரிக்கை வைத்து உள்ளனர். அது என்னவென்றால், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் திருவிழாவிற்கு, மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வருகின்றனர். கோவில் விழாவின் போது, இரு மாவட்ட கலெக்டர்களும் உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!