தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மார்ச் இறுதிவரை விடுமுறை ரத்து – அரசு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 2022 மார்ச் இறுதி வரை விடுமுறை கிடையாது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் அடுத்த தாக்குதலாக ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் பரவ ஆரம்பித்தும் தமிழக அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த நிலையிலும் தமிழகத்தில் ஓமிக்ரான் புகுந்து விட்டது. நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 121 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பு பணியாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும். திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்று ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஞாயிற்றுகிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவத்துறையின் பங்கு அவசியமான ஒன்றாகும். அதனால் முன்கள பணியாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு அமல் – வெறிச்சோடிய சாலைகள்!
தற்போது தமிழகம் முழுவதும் 27,76,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பரவல் 2022 மார்ச் இறுதி வரை அதிகரிக்கும் என்பதால் முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சிறப்பு நிலை சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு மையங்களில் பணிபுரியும், போலீசார், ஊர்காவல் படையினர் உட்பட அனைத்து முன் களப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் விடுமுறை எடுக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அவசர தேவைகளுக்கு விடுப்பு தேவை என்றால் மருத்துவக் கல்லூரி முதல்வர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.