தமிழகத்தில் ஆண்களுக்கு அதிகளவு பேருந்து கட்டணம் வசூல் – OPS அறிக்கை!
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பயணம் என்று அறிவித்து விட்டு ஆண்களுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பேருந்து கட்டணம்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவு மூலமாக 85% பெண்கள் பயனடைந்துள்ள நிலையில், அது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச கட்டணம் என்று அறிவித்து ஆண்களுக்கான கட்டணத்தை அதிகரித்து உள்ளனர். இதனால் இலவச பயணத்தால் அரசுக்கு ஏற்படும் அனைத்து இழப்பும் ஆண்கள் தலையில் சுமத்தப்படுகிறது.
தமிழகத்தில் 50,000 சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி – மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை!
மேலும் இதுவரை நகர பேருந்துகளில் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது. சட்டத்துக்கு புறம்பாக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இது குறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நகர்ப்புற பேருந்துகளை விட புறநகர் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புற பேருந்துகளில் மட்டும்தான் இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் ‘மகளிர்க்கு இலவச பயணம்’ என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் என்று வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாக பல புகார்கள் வந்துள்ளன. மேலும் புறநகர் பேருந்துகளில் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகள் என இரு வகைகள் இருக்கின்றன என்றும், விரைவு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அந்த பேருந்துகள் பெரும்பாலும் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தப்படுவதாகவும் பயண நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்து விட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைபிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் ஆகும். இது அரசிற்கும் அந்த பகுதி ஆட்சியாளர்களுக்கும் தெரிந்து நடைபெறுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.