தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்க்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதையடுத்து தற்போது அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்க்கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட அரசு கலை கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு கல்வியாண்டுக்கான 1.30 லட்ச இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு 4 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலான மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறு கல்வி நிர்வாகங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலினை மேற்கொண்ட உயர்கல்வித்துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலான மாணவர்கள் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு கல்லூரிகளில் கலை பிரிவுகளில் கூடுதலாக 10% வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு அந்தந்த கல்லூரிகளில் இருக்கும் ஆய்வகங்களில் வசதிகளுக்கேற்ப அதிகபட்சமாக 20% வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் வரையும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் வரையும் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ளலாம் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்