சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – தீபாவளி பண்டிகை எதிரொலி!

0
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - தீபாவளி பண்டிகை எதிரொலி!
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - தீபாவளி பண்டிகை எதிரொலி!
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – தீபாவளி பண்டிகை எதிரொலி!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், வணிக சந்தையில் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை:

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் மக்கள் ஆடை, ஆபரணம், பட்டாசு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். சாதாரண குடும்ப நிலையிலுள்ள மக்கள் கூட தீபாவளி பண்டிகையின் போது நகை வாங்குவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் ஆபரண தங்கத்தின் விற்பனை பண்டிகை காலத்தில் அதிக அளவில் இருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

அதிக தேவை இருப்பதால் பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையானது அதிக அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4685க்கும், ஒரு சவரன் தங்கம் ஆனது ரூ.37480 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளியானது கிராம் 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூபாய் 61 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு – மாநில வாரியான பட்டியல் இதோ!!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை ஆனது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 75 உயர்ந்து ரூ.4740 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூபாய் 600 உயர்ந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலையானது அதிக அளவில் உள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!