அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு – மாநில வாரியான பட்டியல் இதோ!!

1
அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு - மாநில வாரியான பட்டியல் இதோ!!
அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு – மாநில வாரியான பட்டியல் இதோ!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், பல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஜூலை 1,2022 முதல் டிசம்பர் 31,2022 வரையிலான மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்னதாக 34% ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது தற்போது மேலும் 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளனர். அது பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

Follow our Instagram for more Latest Updates

பஞ்சாப்:

முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தீபாவளி பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி வழங்க முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் அல்லது தற்போதைய ஓய்வு திட்டத்தை பயன்படுத்துவதற்கான விருப்பங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநில ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். ஜூலை 1,2022 முதல் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கூடுதல் அகவிலைப்படி உயர்வு காரணமாக மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.1106 கோடி செலவு அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இது எங்களோட தீபாவளி பரிசு.. மாநில மக்களுக்கு அரசின் அசத்தல் அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!

டெல்லி

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 4% உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேச அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஹரியானா:

ஹரியானா மாநில அரசு தனது ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது அக்டோபர் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகை நவம்பர் மாதம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் அரசு தனது ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. இதனால் தற்போது அரசு ஊழியர்கள் 33 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். மாநில அரசின் இந்த அறிவிப்பினால் 3.80 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

ஜார்கண்ட்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 1.35 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஆனது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

  1. தமிழக அரசு எப்போது அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!