உதவி பேராசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!

1
உதவி பேராசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு - உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!
உதவி பேராசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு - உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!
உதவி பேராசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி:

அரசு கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் பணிக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்காக அரசு விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட சதவீதம் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக 5 வருட பணியில் உள்ளவர்களை நியமிக்க இருப்பதாக அறிவித்தது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது.

பிப்.,28 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை!!

வழக்கு:

தென்காசியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க தடை விதிக்க கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் சார்பாக மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இடைக்கால தடை:

இந்நிலையில் அரசு கவுரவ விரிவுரையாளர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை தொடங்கியுள்ளதால் மேற்கண்ட மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தில், கவுரவ விரிவுரையாளர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை நிறுத்துமாறு மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியராக நியமிக்க நடக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பதே முறை. TRB வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களில் பணி புரியும் ஆசிரியர்களையும் அரசு பணிக்கு அப்படி தான் தேர்ந்தெடுக்கிறார்கள். திறமைக்கும் தகுதிக்கும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடின்றி வாய்ப்பளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!