தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு? உண்மை நிலவரம் இதோ!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எழுந்து வரும் தகவலுக்கு தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த மாத துவக்கத்தில் இருந்து தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மாநிலங்கள் தோறும் மீண்டுமாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் ஆயிரங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த தினசரி பாதிப்புகளை கருத்தில் கொண்டு 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா பரவல் தொற்று 30 ஆயிரமாக அதிகரித்தது.
தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதையடுத்து திரையரங்குகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு கடைகள், பொது போக்குவரத்து, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகள், மத வழிபாட்டு தளங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றுக்கு வழக்கமான வகையில் 50% மட்டுமே செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இப்படி இருக்க ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்புகள் மெல்ல மெல்ல வீழ்ச்சியடைய துவங்கியது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்து, திரையரங்குகள் 100% இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
அது போல கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் பிப்ரவரி 19ம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் தமிழக அரசு கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டுவதாகவும், தேர்தலுக்கு பின்பாக மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்றும் சில கருத்துக்கள் அவ்வப்போது எழுந்து வந்தது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து கூறுகையில், ‘கொரோனா பாதிப்புகள் குறைந்ததற்கு காரணம் தடுப்பூசிகளின் அதிகரிப்பினால் தான்.
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு – அரசின் அதிரடி முடிவு என்ன?
தவிர மக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என்பதை அறிந்து கொண்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 92% முதல் டோஸ் தடுப்பூசியையும், 72% பேர் இரண்டு டோஸ்களையும் எடுத்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை உருவாகக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.