தமிழகத்தில் நாளை (செப்.7) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முழு List இதோ!
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.7) மதுரையில் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்தடை
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் மாதந்தோறும் சரி செய்யப்படுகிறது. அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முறையாக மாதந்தோறும் செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணியின் போது மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடைபெறுவது வழக்கமாகும். இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை மதுரையில் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை நாளை (செப்.7) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முழு விபரம் இதோ!
அத்துடன் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பயன்பெறும் பகுதிகளான இரும்பாடி, தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் நிலையம், சமயநல்லூர், வளர் நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு, ஊர்மெச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.7) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்