Post Office இல் ரூ.16 லட்சம் வரை வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள RD திட்டத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வட்டி விகிதம் மற்றும் பல்வேறு பலன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
RD திட்டம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்களில் இழப்பு ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீடாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு செலுத்த தொடங்கினர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் வட்டி விகிதம் அதிகமாக பெற முடிகிறது. அத்துடன் இதில் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட பெருமளவு இணைகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள ஆர்டி டெபாசிட் கணக்கு பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்ச முதலீடாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் வங்கிகளில் 6 மாதம், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என தொடர் வைப்பு கணக்குகளை சேமிக்க முடியும். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தின் மீது ஒவ்வொரு காலாண்டுக்கும் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வு காலம் முடிவில் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படுகிறது.
TCS நிறுவனத்தில் 1,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – 2023 ஆம் ஆண்டிற்குள் திட்டம்!
இதில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் ஒரு சதவிகிதம் அபராதம் செலுத்தப்படும். அத்துடன் 4 தவணைகள் முதலீடு செய்யாமல் இருந்தால் தங்களின் சேமிப்பு கணக்கு மூடப்பட்டுவிடும். தற்போது இந்த திட்டத்தில் 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்யும் போது 10 ஆண்டுகள் முதிர்வு காலமாக தேர்ந்தெடுத்தால் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு முதிர்வு காலத்தின் முடிவில் 16 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.