Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – 5 ரூபாய் முதலீட்டில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
நாட்டில் வயது முதிர்ந்த மூத்தவர்களுக்கான சேமிப்பு திட்டங்களை பற்றிய பல அறிவிப்புகள் அஞ்சலகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வரும் நிலையில், குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை அடையும் திட்டத்தை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
சேமிப்பு திட்டம்:
பாதுகாப்பாக முதலீடு செய்யும் வகையில் நாட்டின் அஞ்சல் துறை பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அஞ்சல் அலுவலகத்தை தவிர மற்ற வழிகளில் முதலீடு செய்து வருகின்றனர். சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்களும் அதிக லாபம் மற்றும் வட்டியை பயனர்களுக்கு பெற்று தருகிறது. இந்த பதிவில் அஞ்சலகத்தில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தை பற்றியும், அவற்றில் பெறக்கூடிய நன்மைகளையும் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
‘செம்பருத்தி’ ஷபானா திருமண விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு – கோபமான நடிகை!
அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் சேர்ந்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேருவதற்கு பயனர்கள் 10 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இது தவிர அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து கொள்ளலாம். ரூ.10 லட்சம் பணத்தை மூத்த குடிமக்கள் மொத்தமாக 5ஆண்டுகளுக்கு முதலீடு செய்து 7.4 சதவீத வட்டியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக ரூ.14,28,964 ஆக பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
உங்களின் முதலீட்டிற்கு ரூ. 4,28,964 அளவு பணத்தை வட்டியாக நீங்கள் பெறலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த பட்ச முதலீடு ரூ.1,000 ஆக உள்ளது. அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்ய முடியும். அதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது. அதிகபட்ச முதிர்வு காலமாக மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் ஆகவும். ஆனால் பயனர்கள் விரும்பும் பட்சத்தில் அதற்க்கு மேலும் நீட்டிக்கலாம். இந்தியா போஸ்ட் இணையதளத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளது படி, மேலும், 3 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்க முடியும். இதற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.