தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

0
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு! தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது வடகிழக்கு பருவ மழையும் பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் 5ம் தேதி வரை கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சில மாவட்டங்களில் மழை காலம் என்றாலே நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

VIP-களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. அதிகரிக்க உள்ள பணி நியமனங்கள் .. ஆய்வு அறிக்கை வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். மழை நீரும் கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய்களாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் உதவ மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இது குறித்து பேசிய முதல்வர் கன மழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாதவாறு தடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!