தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை அறிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பல பகுதிகளில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக பெய்து வந்த கனமழை தற்போது தான் சற்று குறைந்து உள்ளது. தற்போது இன்றைய வானிலை நிலவரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி உருவாகியுள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் பெய்த கனமழையால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளின் அணைகளிலும் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இந்த நிலை தமிழகத்தில் பரவலாக வரும் அக்டோபர் 7ம் தேதி வரை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச பட்ச மழை அளவு கன்னியாகுமரி மாவட்டத்திலும், குறைந்த பட்ச மழை அளவு மதுரையிலும் பதிவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் உயரப்போகும் EMI -SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனம்!

Exams Daily Mobile App Download

மேலும், வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் வரும் 6ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலை அறிக்கையை அறிந்து கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கைகளை செய்து கொண்டு வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!