கவனம் மக்களே… தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!

0
கவனம் மக்களே... தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல்!!
கவனம் மக்களே... தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல்!!
கவனம் மக்களே… தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று வீசுவதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்

இந்தியாவில் வடகிழக்கு பருவ காற்றானது அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வீசுகிறது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவ காற்றானது வீச தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு, ஆந்திராவின் கிழக்கு கடற்கரைப்பகுதிகள் அதிக மழை பெற்று வருகின்றன. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகியுள்ளது. இது நாளை வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் 24ம் தேதி புயலாக மாறி மேற்கு வங்கத்தை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சிட்ரங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி பரிசுத்தொகுப்பு.. உரிய நேரத்தில் வராததால் கண்டனம்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை,புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர்,திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கோவை, பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!